சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்குப் பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல்.ராகுலிடம் தனது விரக்தியை ஆவேசத்துடன் வெளிப்படுத்தி இருந்தார்.அது சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் மத்தியில் பரவலாக கவனம் பெற்றது.
கே.எல்.ராகுலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் ஒலித்தன. இதில் ஆதரவு குரலே அதிகம். ‘கேமரா கண்களுக்கு அப்பால் அதை செய்திருக்கலாம்’ என்பதை பெரும்பாலான பதிவுகள் எதிரொலித்தன. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலரும் ராகுலுக்கு ஆதரவாக பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் அன்பர்களும், ரசிகர்களும் கே.எல்.ராகுலை தங்கள் அணிக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர். அவர்களது இந்த தூதினை சமூக வலைதளத்தில் அதிகம் காண முடிகிறது. ‘எக்ஸ்’ தளத்தில் ‘Come to RCB’ என தெரிவித்து வருகின்றனர்.
ஆர்சிபி-யும் கே.எல்.ராகுலும்: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கே.எல்.ராகுல், 2013 மற்றும் 2016 ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி உள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் விளையாடி உள்ளார். தற்போது லக்னோ அணியில் விளையாடி வருகிறார்.
டி20 கிரிக்கெட் மீதான ஆர்வம் தனக்கு வந்ததே பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்த்த பிறகுதான் என்றும் யூடியூப் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த சூழலில்தான் ‘ஆர்சிபி அணிக்கு வாருங்கள்’ என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இது அடுத்த சீசனுக்கான அழைப்பு. அடுத்த சீசனுக்கு முன்பாக மெகா ஏலம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 130 போட்டிகளில் விளையாடி, 4623 ரன்கள் எடுத்துள்ளார் ராகுல். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவர், அணியை வழிநடத்தும் கேப்டன்சி திறனும் கொண்டுள்ளார்.
Come to RCB KL Rahul, I assure you that we will never treat you like this
.#SRHvLSG #OrangeArmy #SRHvLSG #SunrisersHyderabad #SRHvsMI #SRHvMI #IPL2024 #IPLCricket2024 #TravisHead #RCBvsSRH #KLRahul #ViratKohli pic.twitter.com/qZMU22oCyH