Tuesday, May 21, 2024
No menu items!
Google search engine
Homeகல்விமருத்துவ படிப்பில் இடம் கிடைக்காதோர் முனவைப்பு தொகையை பெறலாம் | Candidates who do not...

மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காதோர் முனவைப்பு தொகையை பெறலாம் | Candidates who do not get a place in medical course can get application fee


சென்னை: அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது.

இதில், தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் பெறுபவர்கள், இடைநிற்றலை தவிர்க்கும் வகையில், அவர்களிடம் முன்வைப்பு தொகை பெறப்படுகிறது. கலந்தாய்வில் இடங்கள் கிடைக்காதவர்களுக்கு 3 மாதத்துக்குள், அவர்கள் செலுத்திய பணம், அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

இந்நிலையில், 2023-24-ம் கல்வியாண்டு கலந்தாய்வில் பங்கேற்ற 979 மாணவர்களின் விண்ணப்பங்களில் வங்கி கணக்கு விவரங்கள் தவறாக இடம்பெற்றுள்ளது. அவர்கள் ddugselcom@gmail.com என்ற இ-மெயிலில் பிப்.5-ம் தேதிக்குள் தங்களது சரியான வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பித்து முன்வைப்பு தொகையை பெறலாம்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments